பப்பாளியில் பால் எடுத்தல்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள கோ.2 மற்றும் கோ.5 இரகங்கள் பால் எடுப்பதற்கு உகந்தவை. இதில் கோ.2 என்ற இரகத்திலிருந்து கிடைக்கும் பாலில், அதிக நொதித்திறன் அடங்கியுள்ளது. எனவே பால் எடுக்க கோ.2 இரகம் சிறந்தது. பால் எடுத்த பிறகு இந்த இரகங்களில் பழங்களை உண்ண உபயோகப்படுத்தலாம். முதிர்ந்த காய்களில் இருந்து பால் சேகரிக்கவேண்டும். காய்களின் மேல் இரண்டு மதல் மூன்று மில்லி மீட்டர் ஆழத்திற்கு நான்கு இடங்களில் நீளவாட்டில் கீறல் ஏற்படுத்தவேண்டும். இவ்வாறு சீறிவிடுவதற்கு கூரிய பிளேடு, கூரான மூங்கில் தண்டு அல்லது துர ஏறாத கத்தியை உபயோகப்படுத்தவேண்டும். கீறல்களிலிருந்து வடியும் பாலை அலுமினியத் தட்டு, ரெக்சின் அல்லது பாலித்தீன் தாள்கிளல் சேகரிக்கவேண்டும். காய்களிலிருந்து பால் சேகரிப்பு அதிகாலையிலிருந்து காலை பத்து மணிக்குள் செய்து முடிக்கவேண்டும். மூன்று அல்லது நான்கு நாட்கள் இடைவெளிவிட்டு முன்பு பாலெடுத்த அதே காய்களில் மறுபடியும் பால் சேகரிக்கலாம். இவ்வாறு எடுத்த பாலை, சூரிய ஒளியிலோ அல்லது 40 டிகிரி சென்டிகிரேடு உஷ்ணத்தில் செயற்கையான உலர் கருவிகளிலோ உலர்த்தவேண்டும். உலர்த்த தாமதம் ஏற்பட்டால் தரம் பாதிக்கப்படும். “பொட்டாசியம் மெடாபைசல்பைட்” என்ற இராசயனத்தை 0.05 சதம் என்ற அளவில் பாலுடன் சேர்த்தால் பாலில் உள்ள ப்பபெயின் என்ற நொதிப் பொருள் சேதாரம் அடைவதைத் தவிர்க்கலாம். பின் இவற்றை பாலித்தீன் பைகளில் அடைத்து விற்பனைக்கு அனுப்பலாம்.
பால் மகசூலானது இரகம், பால் எடுக்கும் பருவம், மரங்களின் செழிப்பு மற்றும் சாகுபடி செய்யப்படும் பகுதி போன்ற காரணங்களைச் சார்ந்து இருக்கும். ஒரு எக்டரிலிருந்து சுமார் 3000 முதல் 3750 கிலோ வரை பால் எடுக்கலாம்.
பால் எடுக்கப்பட்ட பப்பாளி காய்களை அறவடை செய்து டூடிஃபுரூட்டி எனப்படும் பேக்கரி (அ) அடுமானப் பொருள் தயார் செய்ய பயன்படுத்தலாம்.
கோ.2 - 600 கிலோ / எக்டர்
கோ.5 - 800 கிலோ / எக்டர்


Wild Animal Repellent


In hilly areas and in agricultural lands adjacent to forest cover the damage to crops by wild animals is a common scenario. Damage not only to the crops but also to human lives is seen in many places. Though the government and the forest department have taken a lot of control measures the sorrow stories still continue. The continuing deforestation and the decrease in forest cover is also a reason for this problem. As man invades forest, wild animals enter into the villages adjacent to the forest area. Wild animals like elephants, wild buffaloes, deer, wild boar, monkey, hare, and leopard enter the villages. Human life is under threat because of the entry of leopard, elephants and also wild buffaloes. Elephants destroy crops to a great extent and the farmers incur heavy losses. 
Farmers take some control measures to protect their crops from the wild animals. Electrical fencing, deep trenches around the field and watch towers to see the entry of animals are in practice. But the entry of wild animals is not completely reduced. Paddy, banana, sugarcane, tapioca, coffee, tea and many other crops are damaged by wild animals.
Provimi products private limited, Gobichettypalam who are members of the directorate of Agri business development in Tamil nadu agricultural university, Coimbatore have developed a product which acts not only as a wild animal repellant but also as a plant growth promoter. 
Herboliv checks the entry of elephants, wild boars, deer, wild buffaloes and other wild animals. Herboliv solution should be mixed in water and sprayed on crops. Herboliv is a taste and odor based repellant. The odor of Herboliv keeps damage causing wild animals off the crops. Taking up weekly sprays will keep the wild animals at bay. Spraying over a period of time will give good results. The animals would change track and stop coming to the field in which Herboliv is sprayed. Herboliv acts not only as a wild animals repellant but also as a growth promoter. In addition it also helps in pest and disease control. Herboliv protects plants in an organic way.
The directorate of agri business development in Tamil Nadu agricultural university assists provimi products private limited in taking up field trials and also in improving the quality of the product. The directorate of agri business development also plays a key role in Herboliv hitting the market.

Mechanization in Paddy


Maize Husker Cum Sheller


‪#‎பசுக்களின்‬ பல்லைப் பார்த்து வயதை கண்டுபிடிப்பது

‪#‎பசுக்களின்‬ பல்லைப் பார்த்து வயதை கண்டுபிடிப்பது
கன்று பிறக்கும் பொழுது அதன் கீழ் தாடையில் இரண்டு அல்லது மூன்று வெட்டுப்பற்கள் இருக்கும். ஓன்றிரண்டு மாதங்களில்எட்டுப் பற்களும் முளைத்துவிடும்
இவைகளைத்தான் பால் பற்கள் என்கிறோம். இரண்டு வயது ஆகும்பொழுது பற்கள் விழுந்து நிரந்தர பற்கள் முளைக்க ஆரம்பிக்கின்றன. மத்தியிலிருந்து ஜோடி, ஜோடியாக ஆறுமாத இடைவெளியில் நான்கு ஜோடி நிரந்தர பற்களும் தோன்றும்.
கிடேரியின் தாடை வளர்ச்சி அதிகரிப்பதால் நிறந்தரபற்கள் அகலமாகவும் உயரமாகவும் தூய வெண்மை நிறத்துடன் இருக்கும். எட்டு நிரந்தர பற்களும் முளைத்து விட்டால் கடைசேர்ந்து விட்டது என்கிறோம். பல்லைப் பார்த்து வயதை கண்டுபிடிப்பது.


‎கோழிப்பண்ணை‬ நோய்க்கிருமிகளை அழிக்கும் முறைகள்

கோழிப்பண்ணை‬ நோய்க்கிருமிகளை அழிக்கும் முறைகள்
கோழிப்பண்ணை பராமரிப்பில் நோய்தடுப்பு ஒரு முக்கிய பணியாகும். நோய்தாக்கப்பட்ட கோழிகள் வளர்ச்சி குன்றி, முட்டையிடும் திறன் குறைந்து பண்ணையில் லாபத்தைப் பாதிக்கும்.
கோழிகளைத் தாக்கும் நோய்களை பலவகைப்படுத்தலாம். (உ.ம்.) நச்சுயிரிகிருமிகளால் ( வைரஸ்) ஏற்படும். நோய்கள் பாக்டிரியாக்களால் ஏற்படும் நோய்கள். களான்வகைகள். ஒட்டுண்ணிகள் ஆகியவற்றால் ஏற்படும் நோய்கள்.
பராமரிப்பு முறையினால் வரும் நோய்கள் ஆகும்.
நோய்கிருமிகளை அழிப்பதற்கு மேற்கொள்ளப்படும் முக்கிய வழி முறைகள் :
முட்டை இட்டு ஓய்ந்த கோழிகளை விற்றபின் கோழிப்பண்ணையிலுள்ள உபகரணங்கள், பழைய குப்பைகள், தீவன தண்ணீர் தொட்டிகள் ஆகியவற்றை அகற்றி தனித்தனியாகச் சுத்தம் செய்யவேண்டும். தரை மற்றும் பக்கச்சுவர்களைத் தண்ணீர் விட்டு நன்கு ஊறவைத்து சுத்தமாக கழுவவேண்டும். ஆழ்கூளத்தை வெளியில் ஆழக்குழிவெட்டி அதில்கொட்டி மண்போட்டு மூடி மக்கச்செய்ய வேண்டும்.
நோயுற்ற பண்ணையில் பயன்படுத்திய துணிகள், திரைகள் ஆகியவற்றை கொதிநீரில் போட்டு சுத்தம் செய்ய வேண்டும். கம்பிவலை, தூண்கள், குறுக்குக்கம்பிகள், திரைச்சுற்றுப்புறம் ஆகியவற்றிலுள்ள ஓட்டைகளைச் சுத்தம் செய்ய வேண்டும்.
பண்ணையில் உள்ள விரிசல்கள், சுவர், தரை உடைசல்களைச் சிமெண்ட்க்கலவை கொண்டு சரிசெய்ய வேண்டும்.
புற ஓட்டுண்ணிகளான பேன், வண்டுகள், செதிள்பூச்சிகள்,ஆக ஓட்டுண்ணிகள், ரத்தக்கழிசல் கிருமிகள் ஆகியவற்றை ஒழிக்க 150 சதுரடிக்கு 10 மில்லி மாலத்தியான் (5 சதம்) மருந்தை 5 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பான் மூலம் தரை முதல் கூரை வரை தெளிக்க வேண்டும்.
கம்போரா, ராணிக்கட் மற்றும் மேரக்ஸ் தாக்கிய பண்ணைகளில் அயோடோபார் மருந்தைப் பயன்படுத்தி ( 200 மில்லி மருந்துக்கு 20 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து) 100 சதுரடிக்கு உயரழுத்த விசைத் தெளிப்பான் மூலம் தெளித்து கிருமிகளை அழிக்கலாம்.
20 கிலோ சுண்ணாம்பு 50 கிராம் பிளீச்சிங் பவுடரைக் கலந்து தரை சுவர் ஆகியவற்றை வெள்ளை அடிக்க வேண்டும்.
கம்போரா போன்ற கொடிய நோய்கள் தாக்கிய பண்ணைகளில் அவற்றை முற்றிலும் அழிக்க 100 கன அடிக்கு 60 கிராம் பொட்டாசியம் பெர்மங்கனேட்டை 120 மி.லி. பார்மலின் கரைசலில் ஊற்றி கோழிக்கொட்டகையின் நடுவில் வைத்து விட வேண்டும்.
இவ்வாறு பார்மலின் புகைமூட்டம் செய்வதற்கு முன்பு நன்கு சுரண்டித் தேய்த்து கழுவிய பண்ணை உபகரணங்களை 10 லிட்டர் தண்ணீருக்கு அரை கிலோ சலவை சோடா கலந்து கழுவவேண்டும்.
தண்ணீர்த் தொட்டி போன்ற உபகரணங்களை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 மி.லி. அயோடோபார் கலந்து அதில் 2 மணி நேரம் ஊரவைத்து பிறகு தண்ணீரில் கழுவ வேண்டும். தீவனத்தொட்டியை 30 நிமிடம் ஊறவைத்து பின்பு தண்ணீரில் கழுவவேண்டும்.
இவ்வாறு சுத்தம் செய்யப்பட்ட உபகரணங்களை கோழிக்கொட்டகையில் வைத்து, சுத்தப்படுத்தப்பட்ட திரைகளைக் கட்டி தொங்கவிட்டு, காற்றுப்புகாதபடி மூடி, கோழிக் கொட்டகையினுள் காற்றின் ஈரப்பதத்தை 70 சதம் இருக்கும்படி செய்ய சாக்குகளைத் தண்ணீரில் நனைத்து கம்பிவலையில் தொங்க விட வேண்டும்.
பின்பு பார்மலின் புகை முட்டம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்து நோய்க்கிருமிகளை அழிக்க வேண்டும்.